செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

Published On 2021-05-25 16:04 IST   |   Update On 2021-05-25 16:04:00 IST
கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை சட்டத்துறை ரகுபதி தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

முகாமில் கலெக்டர் உமா மகேஸ்வரி, முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் நகராட்சியில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

Similar News