செய்திகள்
கருப்பு பூஞ்சை

ஆலங்குடி அருகே ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி

Published On 2021-05-24 17:46 IST   |   Update On 2021-05-24 17:46:00 IST
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தாக்கமும் ஆங்காங்கே இருந்து வருகிறது.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தாக்கமும் ஆங்காங்கே இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருந்தது. இந்த நிலையில் ஆலங்குடி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் அறிகுறி இருந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News