செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,954 பேர் பாதிப்பு - 38 பேர் உயிரிழப்பு

Published On 2021-05-23 00:35 IST   |   Update On 2021-05-23 00:35:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,954 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,954 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 38 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,954 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 62 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,474-ஆக உயர்ந்தது. 15,121 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 1,017 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 574-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 802- ஆக உயர்ந்துள்ளது. 7,101 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News