செய்திகள்
கொரோனா பரிசோதனை

காரணமின்றி வெளியே சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை- போலீசார் நடவடிக்கை

Published On 2021-05-20 14:27 IST   |   Update On 2021-05-20 14:27:00 IST
பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு நேரத்தில் பலர் காரணமின்றி வெளியே சுற்றி திரிந்து வருகிறார்கள். இதுவும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டும், கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து காரணமின்றி வெளியே சுற்றி திரிபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களது முகவரி முழுமையாக பெற்றுக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் அவர்களது உமீழ் நீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டு பலர் அலறி அடித்து ஓடுகின்றனர்கள். போலீசாரின் இத்தகையை முயற்சியின் மூலமாக காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் தடுக்கப்படுவதுடன், தொற்று பரவலும் சற்று குறைவதற்கான வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவருபவர்களிடம் போலீசார் கண்ணியத்தோடு பல்வேறு வகையில் எடுத்துரைத்து வந்தனர். இருப்பினும் இதை பலரும் பின்பற்றவில்லை. இதையடுத்து போலீசார் இத்தகையை முயற்சியை கையில் எடுத்து இருப்பது வரவேற்பே பெற்றுள்ளது. இதே நிலையை மாவட்டம் முழுவதும் செயல்படுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Similar News