செய்திகள்
காட்டுமன்னார்கோவிலில் கஞ்சா கடத்திய 2 மாணவர்கள் கைது
காட்டுமன்னார்கோவிலில் கஞ்சா கடத்திய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், தமிழ்செல்வன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் லால்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிற்குமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 150 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 2 கிலோ ஆகும். மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதையடுத்து இவருரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 21) என்பதும், இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் மின் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன்(19) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருவதும், நண்பா்களான இவர்கள் தஞ்சாவூரில் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், தமிழ்செல்வன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் லால்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிற்குமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 150 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 2 கிலோ ஆகும். மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதையடுத்து இவருரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 21) என்பதும், இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் மின் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன்(19) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருவதும், நண்பா்களான இவர்கள் தஞ்சாவூரில் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.