செய்திகள்
தற்கொலை

கே.வி.குப்பம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-26 10:04 GMT   |   Update On 2021-04-26 10:04 GMT
கே.வி.குப்பம் அருகே வீட்டில் வைத்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:

கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49), தொழிலாளி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News