செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூரில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-23 11:17 GMT   |   Update On 2021-04-23 11:25 GMT
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,232 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,943 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 238 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் ஒருவருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 17 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,440 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,343 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 74 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 844 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் வர வேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 30,234 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News