செய்திகள்
விஷம்

குன்னூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-15 10:59 GMT   |   Update On 2021-04-15 10:59 GMT
குன்னூரில் குடும்ப தகராறு காரணமாக மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கும், ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேசன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து திடீரென வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் கணேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News