செய்திகள்
சொன்னதை செய்யக்கூடியவர் துரைமுருகன் - காட்பாடி தொகுதியில் சங்கீதா கதிர்ஆனந்த் பேச்சு
சொன்னதை செய்யக்கூடியவர் துரைமுருகன். எனவே காட்பாடி தொகுதியில் அவரை வெற்றி பெறச் செய்ய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என சங்கீதாகதிர்ஆனந்த் பேசினார்.
வேலூர்:
காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பிரசாரம் செய்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் அமைச்சராக இருந்தபோது பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆற்றிய பல்வேறு திட்டங்கள், பாலாறு, ெரயில்வே மேம்பாலங்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அகலமான சாலைகள், காவிரி கூட்டுக் குடிநீர், அங்கன்வாடி, பள்ளி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற திட்டங்களை எடுத்துக்கூறி வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் காட்பாடி தொகுதியில் ரூ.15 ஆயிரம் கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். வேட்பாளர் துைரமுருகன் ெசான்னதை செய்யக்கூடியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.
அவருடன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வாசுகி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் கண்ணகி மற்றும் மகளிர் அணியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.