செய்திகள்
கோப்பு படம்.

வேலூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-03-30 16:55 IST   |   Update On 2021-03-30 16:55:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொற்று பாதிப்பு காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. ஆனாலும் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

நேற்று முன்தினம் 31 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய பரிசோதனையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News