செய்திகள்
கைது

தானிப்பாடி அருகே 300 லிட்டர் சாராயம் பறிமுதல்- 5 பேர் கைது

Published On 2021-03-28 14:33 IST   |   Update On 2021-03-28 14:33:00 IST
தானிப்பாடி அருகே 300 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகிலுள்ள தானிப்பாடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாரசாமி மற்றும் அதிரடி படை போலீசார் சாராய தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மலையனூர் செக்கடி சென்னம்மாள் (வயது 55), ரெட்டியார்பாளையம் வாசுகி (43), காமராஜர் நகர் காமாட்சி (43), பீமாரப்பட்டி பட்டன் (55), பழனி (52) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News