செய்திகள்
கைது

மாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-03-23 13:01 GMT   |   Update On 2021-03-23 13:01 GMT
மாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:

மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் நேற்று மாலை மாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஏர்போர்ட் வினோத் (வயது 30), பெருமாள் (30), குருமூர்த்தி (25), கே.கே. நகரை சேர்ந்த முனியசாமி (30), மண்டையூர் சரவணன் (36) ஆகிய 5 பேர் பிடிபட்டனர். பின்னர் 5 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News