செய்திகள்
கண்காணிப்பு கருவி பொருத்தம் காட்சி

பறக்கும் படை வாகனங்களில் கண்காணிப்பு கருவி பொருத்தம்

Published On 2021-03-07 18:15 GMT   |   Update On 2021-03-07 18:15 GMT
தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்:

தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் போன்றவை கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பணம் பட்டுவாடா செய்வது பற்றியோ, பரிசுப் பொருட்கள் கொடுப்பது பற்றியோ புகார் தெரிவிக்கும்போது பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்கிறார்களா?, முறையாக சோதனை நடத்துகிறார்களா? என்பதை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு (ஜி.பி.எஸ்.) கண்காணிப்பு கருவிகள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அதில் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்தக் கருவிகள் மூலம் பறக்கும் படையினரின் செயல்பாட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணிக்கலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகன தணிக்கை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News