செய்திகள்
கோப்புபடம்

விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Published On 2021-03-04 13:34 GMT   |   Update On 2021-03-04 13:34 GMT
விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலர்(வயது 46). பட்டகட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (24). சம்பவத்தன்று நாகமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் கோவிந்தராசு ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மலர், கோவிந்தராசுவிடம் உங்கள் உறவினர் சேகர் இறைச்சி வாங்கிய வகையில் தனக்கு பாக்கி இன்னும் தரவில்லை என்று கூறியுள்ளார். அப்போது, உதயகுமார் என் தந்தை எப்போது இறைச்சி வாங்கினார் என்று மலரிடம் கேட்டார். இதுதொடர்பாக உதயகுமாருக்கும், மலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது உதயகுமார், மலரின் சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் அப்பெண் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார்.

Tags:    

Similar News