செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்- 2 பேர் கைது
கந்தர்வகோட்டை அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கந்தவர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி உரிமையாளர் தஞ்சாவூரை சேர்ந்த சதீஷ் (வயது 31), லாரி டிரைவர் மழைராஜ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கந்தவர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி உரிமையாளர் தஞ்சாவூரை சேர்ந்த சதீஷ் (வயது 31), லாரி டிரைவர் மழைராஜ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.