செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 163 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 288 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 823 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 250 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.