செய்திகள்
வாகன சோதனை (கோப்புப்படம்)

தேர்தல் தேதி அறிவிப்பு- மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை

Published On 2021-02-27 09:14 GMT   |   Update On 2021-02-27 09:14 GMT
புதுவை - தமிழக எல்லை பகுதியான கோரிமேடு பகுதியில் மதுபானம், பரிசுப்பொருட்கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என இரவு முதலே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதுச்சேரி:

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து புதுவை மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்ந நிலையில் புதுவை தமிழக எல்லை பகுதியான கோரிமேடு பகுதியில் மதுபானம், பரிசுப்பொருட்கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என இரவு முதலே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கலால்துறை இணை ஆணையர் சுதாகர், வருவாய்த்துறை துணை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தலைமையிலான போலீசார் புதுவைக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News