செய்திகள்
கோப்புபடம்

சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை

Published On 2021-02-25 12:08 GMT   |   Update On 2021-02-25 12:08 GMT
சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் யுகபிரதாபன் மகன் சேரன் (வயது 49), விவசாயி. இவர் தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்ததாகவும், கடந்த 10 மாதமாக சீட்டு பணம் கட்டவில்லை என தெரிகிறது.

இதனால் தனியார் நிறுவன மேலாளர் சம்பவத்தன்று சேரனின் வீட்டுக்கு வந்து, அவரிடம் உடனடியாக சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சேரன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் விரைந்து வந்து, சேரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேரன் சீட்டு பணம் கட்ட முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News