செய்திகள்
கைது

ஸ்ரீ முஷ்ணம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-02-23 11:58 GMT   |   Update On 2021-02-23 11:58 GMT
ஸ்ரீ முஷ்ணம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீ முஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவேந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23) கூலி தொழிலாளி.

இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் தனிப்டை அமைத்து விசாரித்து வந்தனர்.

அதில் அவர்கள் வெளியூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திகேயன் மற்றும் சிறுமியை சேத்தியா தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இன்ஸ்பெக்டர் ஆலிஸ்மேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News