செய்திகள்
நெல்லை அருகே பால் வியாபாரி தற்கொலை
நெல்லை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 60). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவசங்கர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிநேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.