செய்திகள்
கோப்புபடம்

கடலூர் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2021-02-18 12:29 GMT   |   Update On 2021-02-18 12:29 GMT
கடலூர் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதுநகர் பகுதியில் சாராயம் விற்றதாக சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(வயது 47), செந்தில்(35), பீமாராவ் நகரை சேர்ந்த வனிதா(47), குயவன்குளம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்(30), மணக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து 380 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News