செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Published On 2021-02-14 09:22 GMT   |   Update On 2021-02-14 09:22 GMT
கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பரசுராமன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 150 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News