செய்திகள்
மரணம்

சென்னை விமான நிலையத்தில் ஆண் பிணம் மீட்பு

Published On 2021-02-12 02:43 GMT   |   Update On 2021-02-12 02:43 GMT
சென்னை விமான நிலையத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு வருகை முனையத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளது. அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நீண்டநேரமாக தூங்கியபடி இருந்தார். காா் டிரைவா்கள் சிலர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவர் அசைவற்ற நிலையில் கிடந்தாா்.

இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர் இறந்து விட்டது தெரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? என விசாரித்தனர். அதில் அவர் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அவரது பெயர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவர் மாரடைப்பில் இறந்தாரா? அல்லது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News