செய்திகள்
கைது

அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2021-02-10 19:56 IST   |   Update On 2021-02-10 19:56:00 IST
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சாத்தி விடத்திரான்வயலை சேர்ந்த விக்ரமன் (வயது 32) லாட்டரி சீட்டுகளை விற்ற போது அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1,500, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

Similar News