செய்திகள்
கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது

Published On 2021-02-09 17:43 IST   |   Update On 2021-02-09 17:43:00 IST
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுக்கையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் யுவன் போலீசாருடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த தூசி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), ரமேஷ் (41), பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News