செய்திகள்
உத்திரமேரூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
உத்திரமேரூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது மானாமதி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மானாமதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.