செய்திகள்
அன்னவாசல் அருகே சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு
அன்னவாசல் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டி பகுதியில் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லெக்கணாப்பட்டி பகுதியில் உள்ள பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 46) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.