செய்திகள்
கைது

கடலூரில் மாணவிக்கு மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2021-01-31 10:13 GMT   |   Update On 2021-01-31 10:13 GMT
கடலூரில் கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:

கடலூர் சங்கரநாயுடு தெருவை சேர்ந்தவர் 20 வயதுடைய கல்லூரி மாணவி. இவர் கடலூரில் உள்ள ஒருதனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாகம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் பிரபாகர் (வயது 30) என்பவர், தனது ஆட்டோவில் ஏற மாட்டியா? என்று கூறி கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கல்லூரி மாணவி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரை கைது செய்தனர்.
Tags:    

Similar News