செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா

Published On 2021-01-30 04:39 GMT   |   Update On 2021-01-30 04:39 GMT
கடலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 910 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 593 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 285 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இவர்களில் என்.எல்.சி. பகுதியை சேர்ந்த டாக்டருக்கும், விருத்தாசலத்தை சேர்ந்த முன்கள பணியாளருக்கும், மயிலாடுதுறையில் இருந்து புவனகிரிக்கு வந்த ஒருவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரி, குமராட்சி பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 37 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 340 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Tags:    

Similar News