செய்திகள்
சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் சினேகா(வயது 18). இவர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று சினேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதை அவருடைய தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.