செய்திகள்
வேதாரண்யம் அருகே மது விற்ற 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே 2 பேர் மது விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேல ஆறுமுகக்கட்டளை சேர்ந்த சாமிதுரை(வயது36), பெரியகுத்தகை பகுதியை சேர்ந்த வேதராசு(53) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களி்டம் இருந்து மொத்தம் 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.