செய்திகள்
விபத்து பலி

வாய்மேடு அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2021-01-20 10:11 GMT   |   Update On 2021-01-20 10:11 GMT
வாய்மேடு அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனித்துரை (வயது60). விவசாயி. இவர் தனது சைக்கிளில் தாணிக்கோட்டகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தாணிக்கோட்டகம் நைனாகுளம் அருகில் வந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனித்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பழனித்துரைக்கு விஜயகுமாரி (55) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News