செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது

Published On 2021-01-11 04:33 GMT   |   Update On 2021-01-11 04:33 GMT
குருபரப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீசார், பந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் வெங்கட்டப்பன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பேரிகை போலீசார் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவில் தெருவை சேர்ந்த கிரண்குமார் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற சுரேஷ்குமார் (41), பாகலூர் பாஸ்கர் (52), கமக்காலப்பட்டி மந்திரி (52), அரசம்பட்டி சந்தோஷ் (38), தேன்கனிக்கோட்டை அருகே மேல்கொட்டாய் சிவக்குமார் (55) என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News