செய்திகள்
விபத்து பலி

பூவந்தி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2021-01-04 16:13 IST   |   Update On 2021-01-04 16:22:00 IST
பூவந்தி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

பூவந்தி அருகே உள்ள சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏலப்பிச்சன் (வயது 42). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகங்கை சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சித்தாலங்குடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி செல்லாயி பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News