செய்திகள்
இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
இளையான்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள தெற்கு கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர் (வயது 60). இவர் கடந்த ஆண்டில் மலேசியாவில் வேலை பார்த்து விட்டு கொரோனா காலத்தில் ஊர் திரும்பியுள்ளார். இங்கு விவசாயம் பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி பயிருக்கு தெளிக்க வாங்கி வைத்த பூச்சி மருந்தை எடுத்து அழகர் குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.