செய்திகள்
நாகூரில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பலி
நாகூரில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
திருத்துறைப்பூண்டியை அடுத்த ஜாம்புவான் ஓடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் நாகூரில் உள்ள பைபர் படகு கட்டும் இடத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று நாகூர் மெயின் ரோட்டில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்த போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவரை தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.