செய்திகள்
பாடப்புத்தகங்கள்

மயிலாடுதுறை இரும்புக்கடையில் பள்ளி பாடப்புத்தகங்கள்

Published On 2020-12-29 09:56 IST   |   Update On 2020-12-29 09:56:00 IST
தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி பாடப்புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் உள்ள பழைய இரும்பு கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்துறையினருக்கு ரகசியல் தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5000-க்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News