செய்திகள்
அபராதம்

நாகையில் வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டதால் ரூ.20 ஆயிரம் அபராதம்

Published On 2020-12-28 23:38 IST   |   Update On 2020-12-28 23:38:00 IST
நாகையில் வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டதால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

தஞ்சாவூர் துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் நாகை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து வகையான வாகனங்களிலும் சட்டத்திற்கு புறம்பாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை கழற்ற அறிவுறுத்தினர். டிரைவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக முன் பம்பர் பொருத்தப்பட்டு வாகனங்கள் இயக்கக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது. சோதனையின் போது பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அவற்றில் தண்டனை தொகையாக ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Similar News