செய்திகள்
வடகாடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
வடகாடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாங்காடு சுள்ளியதெரு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் (வயது 55) உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.620 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.