செய்திகள்
நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2020-12-24 15:55 IST   |   Update On 2020-12-24 15:55:00 IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கனி. இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.

விருத்தாசலம் பஸ் நிலையத்துக்க வந்த அவர், தான் பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போதே அவரது நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Similar News