செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிகொண்டு வருவோம்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2020-12-23 07:58 GMT   |   Update On 2020-12-23 07:58 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம்:

விடியமலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது 2-ம் கட்ட பிரசாரத்தை கடலூர் மாவட்டத்தில் தொடங்கினார்.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தற்போது நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி பாரதீய ஜனதா கட்சியின் சொல் கேட்டு நடக்கும் அடிமை ஆட்சி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று கவர்னரை சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை மனுவாக கொடுத்துள்ளார். நீட்தேர்வுக்கு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது உள்ள எடப்பாடி அரசு நீட்தேர்வை ஆதரித்துள்ளது. இதனால் அனிதா உள்ளிட்ட 15 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

பா.ஜனதா அரசு தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நிலையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதனால் 38 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. இதைபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்களின் ஆதரவை பெற்று 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராவார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டதிருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பிரசாரத்தின் போது வேளாண் சட்டதிருத்த மசோதாவால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News