செய்திகள்
கோப்புபடம்

நாகூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

Published On 2020-12-18 20:55 IST   |   Update On 2020-12-18 20:55:00 IST
நாகூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபரை கைது செய்த போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:

நாகை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரிலும், துணை சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல் படியும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூரை அடுத்த பாலக்காடு பகுதியில் நேற்று நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

அப்போது அந்த பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் சரக்கு வேனில் ஒருவா் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அங்கு சென்று மணல் அள்ளி கொண்டிருந்த நபாிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், நாகூரை அடுத்த தெத்தி கீழத்தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் அரவிந்த் (வயது 35) என்பதும், அவர் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். மேலும் அவாிடம் இருந்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனா்.

Similar News