செய்திகள்
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி
புதுக்கோட்டை மாட்டம் விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விராலிமலை:
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, மினிக்கியூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் போதுராஜ் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக போதுராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த போதிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, மினிக்கியூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் போதுராஜ் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக போதுராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த போதிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.