செய்திகள்
கைது

கீழ்வேளூர் அருகே ஆட்டோவில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது

Published On 2020-12-16 15:32 IST   |   Update On 2020-12-16 15:32:00 IST
கீழ்வேளூர் அருகே ஆட்டோவில் ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே செருநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் ஜெயராமன் (வயது31). இவா் தனது வீட்டின் வாசலில் தனக்கு சொந்தமான 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது நேற்று காலை ஆட்டோவில் வந்த 2 பேர், மூன்று ஆடுகளை திருடி சென்றுள்ளனா். இதை பார்த்த ஜெயராமன் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவா்களை விரட்டி பிடித்தனா். பின்னா் அவா்களையும், ஆட்டோவையும் கீழ்வேளூா் போலீசாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா்களிடம் போலீசார் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் கீழ்வேளூர் புத்தர்மங்களம் முருகேசன் மகன் பிரசாத்(வயது24), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (45) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

Similar News