செய்திகள்
திருவண்ணாமலை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
திருவண்ணாமலை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா இனம்காரியந்தல் கிராமம் மேல்நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 24). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து கருணாகரனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.