செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-08 20:07 IST   |   Update On 2020-12-08 20:07:00 IST
வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்:

வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கோட்டி, துணை செயலாளர் சாந்தகுமார், வேலூர் தொகுதி துணை செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விஜயசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அம்பேத்கர் போராடி பெற்ற கல்வி உதவித்தொகை திட்டமான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த கூடாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி தேர்வு வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலாளர் பிலிப், மாவட்ட பொருளாளர் சஜின்குமார், மாவட்ட சமூக ஊடக அமைப்பாளர் கோவி.தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட 2-ம் பகுதி செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.

Similar News