செய்திகள்
தற்கொலை

பெரணமல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2020-12-07 09:23 IST   |   Update On 2020-12-07 09:23:00 IST
பெரணமல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் அருகே உள்ள நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி சிந்தாமணி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிந்தாமணி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News