செய்திகள்
ஆரணி அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ஆரணி அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 50), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2-ந்தேதி வீட்டு மாடிப்பகுதியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.