செய்திகள்
மரணம்

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

Published On 2020-12-05 12:05 GMT   |   Update On 2020-12-05 12:05 GMT
வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:

நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி கமலம் (வயது 72). உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு கிருஷ்ணசாமி இறந்தார். இதனால் கமலத்தை, பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகன் சுரேஷ்குமார் தன்னுடன் அழைத்து வந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை காலிங்கராயன் வாய்க்காலுக்கு கமலா குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் மூழ்கி இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கமலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News