செய்திகள்
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ரேஷன்கடை உதவியாளர் பலி
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ரேஷன்கடை உதவியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைமணி மகன் குமார்(வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று திருமயம் கடைவீதிக்கு சைக்கிளில் வந்த அவர் அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
காரைக்குடி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.